கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்
இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்
எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்
இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்
முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்?
மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்
இருபுறமும் உனது?
இருபுறமும் எதிர்ப்புறம்?
எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்
களைத்து உறங்கும் உலகம்
ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்
இது என்றோ அது என்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு
அதனால்
கோடுவரைவதெனின்
வரைந்து கொள்
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment