சுகம் பற்றிப்
பேச்சு வந்தது
கொஞ்சம் பொறுத்து
அவன் சொன்னான் -
இருக்கும் சுகத்தையே
அதிர்வு
விசிறிவிடுகிறது
இவன் சொன்னான் -
விசிறத் தெரிவதே
கல்வியும் கலையுமானது
மறுபடி அவன் -
போயுணர்வதும்
வருவித்துணர்வதுமாயிற்று
வாழ்க்கை
மீண்டும் இவன் -
இருந்ததனை
இருந்துணர்வதென்பது
இல்லாமல் போனது
No comments:
Post a Comment