Tuesday, January 1, 2008

அதிர்வு

அதிர்வுகளில் தெரியும்
சுகம் பற்றிப்
பேச்சு வந்தது

கொஞ்சம் பொறுத்து
அவன் சொன்னான் - 
இருக்கும் சுகத்தையே
அதிர்வு
விசிறிவிடுகிறது

இவன் சொன்னான் -
விசிறத் தெரிவதே
கல்வியும் கலையுமானது

மறுபடி அவன் -
போயுணர்வதும்
வருவித்துணர்வதுமாயிற்று
வாழ்க்கை

மீண்டும் இவன் -
இருந்ததனை
இருந்துணர்வதென்பது
இல்லாமல் போனது




No comments: