லயிப்பைத் தவறவிட்ட போது --
வெயிலடித்துக் கொண்டிருந்தது
வழமைபோல்
பொறிகளிலும் கதிர்களிலும்
அடையாளம் கொடுத்துக் கொண்டிருந்தது
ஒளி
தோற்றங்களிடம்
தோற்றுக் கொண்டிருந்தோம்
தலப்புக்களில் அடங்கிப்
பத்தி பிரிந்திருந்தனர் மக்கள்
சங்கீதம்
நிறங்களைக்
கற்பித்துக் கொண்டிருந்தது
வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது
தத்துவம்
வார்த்தைகள் செய்துகொடுத்த
இடவசதிக்குள்
வாழ்க்கை
மீண்டும் நுழைந்து
திருப்திப் பட்டுக் கொண்டது
ஏகமாய்ப் போர்த்திருந்த சுருதி
விலகவும்
மீண்டும்
தன் பொய்வடிவங்களில்
வியாபித்தது வெளி
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment