Tuesday, January 1, 2008

எல்லைக் கோடுகள்

தூரத்தே
எல்லைக் கோடுகள்
திமிராக மினுக்கின

தம் தடத்தில்
துள்ளிக் குதித்து
விறைப்பாக நின்றன

குதூகலம் புரையேறிச் செருமின

வானம் காரையுதிர்க்க
அதிர்ந்தன

சுற்றிலும் காற்றைப் புகைத்து
ஆவி காட்டின

ஏகமாய்க் கமழ்ந்து
உயிர் உறிஞ்சி ஈர்த்தன

குரூரமாய் வெறித்துச்
சவாலிட்டுக் கூவின

பரபரப்பு உள்ளோடி
அவற்றின் மூட்டுகள்
கிறீச்சிட்டன

தம்முள்
தேடல்கள் ஊடுருவிய துளைகளை
அவசரமாய் அடைத்து மழுப்பின

தூரத்தே
எல்லைக் கோடுகள் -- இங்கே
கூச்சம் என் கால்களைக்
குடைந்தது

No comments: