தூரத்தே
எல்லைக் கோடுகள்
திமிராக மினுக்கின
தம் தடத்தில்
துள்ளிக் குதித்து
விறைப்பாக நின்றன
குதூகலம் புரையேறிச் செருமின
வானம் காரையுதிர்க்க
அதிர்ந்தன
சுற்றிலும் காற்றைப் புகைத்து
ஆவி காட்டின
ஏகமாய்க் கமழ்ந்து
உயிர் உறிஞ்சி ஈர்த்தன
குரூரமாய் வெறித்துச்
சவாலிட்டுக் கூவின
பரபரப்பு உள்ளோடி
அவற்றின் மூட்டுகள்
கிறீச்சிட்டன
தம்முள்
தேடல்கள் ஊடுருவிய துளைகளை
அவசரமாய் அடைத்து மழுப்பின
தூரத்தே
எல்லைக் கோடுகள் -- இங்கே
கூச்சம் என் கால்களைக்
குடைந்தது
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment