வெளியில் போய்ப்
புழுதிவிசாரித்துத்
திரும்புவதற்குள்
எல்லா மாலைகளும்
--என்னுடையது தவிர --
கூடிவிட்டன
அசைவுகளை அதட்டி
இன்னது இன்னவைகளின் விளையாட்டை
ஊதி நிறுத்திக்
கூடிவிட்டன
தலைதலையாகத்
தடவித் துயிற்றும்
இருளை ஆடி
யோசனை அமிழ்ந்து மறையும்
பிரவாக அமைதியில்
மூச்சை அடக்கிக் --
கூடிவிட்டன
அடிவான் விளிம்பில்
பறவைக் கூச்சல் மொய்த்துப்
பிணம்போல் --
என்மாலை
Saturday, January 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment