Wednesday, February 6, 2008

எஞ்சிய பகுதி

அந்தக் கொடூரக் கனவின்
ஒரு பகுதியின் மிச்சம்
இன்று பகல் கண்ணயர்வில்
தலயாட்டிப் போனது

இருள் கவ்வியிருந்த
அதன் ஓரங்கள் பற்றிய
நினைவு கூட்டல்
தோல்வியில் முடிந்து
அசதி தந்தது

அதன் கூரிய துகள்கள் சில
மாலை உலாவின் போது
செருப்பினுள் நுழைந்திருந்தன

அதன் கொலைநிழல்
மங்கி மயங்கி
என்னைச் சூழ்ந்து
வந்துகொண்டேயிருந்தது

போக்குவரத்து அடர்த்தியின் நடுவே
கூடி நின்ற கூட்டத்திற்குள்
எட்டிப் பார்த்தபோது
கனவின்
விலாப்பகுதி நைந்து
ரத்த வெள்ளத்தில் குடல்சரிந்து கிடந்தது

கனவில் வந்தறியாத
அதன்
எஞ்சிய பகுதி
இப்படிச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது

No comments: