புரண்டு படுக்க இடமின்றி
ஒற்றையடிப் பாதை
சலிக்கிறது
கடந்துபோன காலங்களின்
சுவடுகள் மீது
கரித்து வளரும் புல்
00
திரும்புதலின் குற்றோசைகள்
படிந்து இறங்கி
அடிமண்ணின் உளைச்சலில்
புழுங்கி அவியும்
இது எப்படித் திரும்புதல் ஆகும்?
ஏதேதோ மூலைகளைப்போய் விழுங்கி
வெடித்து
வேறாகி வருவது
திரும்புதலா?
00
வாசனைகள் இருண்டு
அதனாலேயே
வடிவம் பெறுகின்றன
ஆடுகள் மலையிறங்கித்
தலைதாழ்த்தி வருகின்றன
வானம் சுற்றிலும்
வழிந்து இறங்குகிறது
பேச்சுக்கு முந்திய திருப்பம்
தயக்கங்களால் நிரம்புகிறது
இனிவரும் நூற்றண்டுகளில்
இந்த சதுக்கம்
ஊமை வெளியாக
உறைந்து வெளிரும்
00
வந்தாயிற்று
அதோ தொலைவில்
விளக்குப் புள்ளிகளைத்
தன்மீது தரிக்கும்
ஊரின் மாலை
இங்கே என்னருகே
எனது மாலை
பிரபஞ்ச சோகம் திளைத்து
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment