ஒரு நாள் ஒரு சாயலைப் பார்த்தேன்
நீண்டு கிடந்த சாலையில்
நெடுநேரம் நின்றுகொண்டிருந்தது
வடிவ ஒழுங்குக்குட்பட்ட வருத்தத்துடனும்
கைகளில் இறுகப் பிடித்த மகிழ்ச்சியுடனும்
எதிரெதிராக விரைந்துகொண்டிருந்த
மனிதக் கூட்டத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தது
தனது அலைகளை ஏவி
அனைவரையும் நனைத்தது
எவரும் கண்டுகொள்ளவில்லை
தன் ஒருமையிலிருந்து விடுபட்டது
சிதறல் அன்று என்று
சொல்லிக்கொண்டது
தன் நிலையில் நிற்க முடியாத போது
சிறிது நேரம்
மங்கி மறைந்துபோய்
மறுபடி தோன்றியது
தன்னை உறுத்துப் பார்த்துச்
சந்தேகத்துடன் நகரும் குழந்தைகளைப்
புன்னகைத்தது
ஊர்ந்து பரவி
நாலா திசையும் கடந்தது
கடலோரங்களில்
மலைச்சரிவுகளில்
மனித விரலிடுக்குகளில்
சஞ்சரிப்பதாயிற்று
யாரும் அறியாத அதன் கம்பீரம்
மாசு படாது ஜொலித்தது
Thursday, January 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment