உறங்கப் போகும் போது
எப்போதும்
ஒரு தாள லயத்தைக்
கடந்து போக நேரிடும்
பாறைகள் குதித்துக்கொண்டிருப்பது போல்
ஆரம்பித்து
நீருக்குள் கூழாங்கற்கள் உருள்வதுபோல்
அது முடிவடையும்
இப்போது தாளலயம்
ஓசைவரம்பு தாண்டி
விரிந்து பரவிக்கொள்ளும்
தொட அனுமதிக்காது --
மூச்சுக் காற்றைக்கூட வழுக்கிவிடும்
கவனிப்புக்கு உட்படும் நிலையிலேயே
வேறோருபுறம்
சூட்சுமமாய்க் கலகம் செய்யும்
0-0
உறங்கிப்போன பின்பு
மறுபடி ஓசை உருக்கள் வெளிப்படும்
காலத்தைக் கணுக்கணுவாகத் தறிக்கும்
காலம் -- ஓசை -- காலம் -- ஓசை எனத்
தொடுத்துக்கொள்ளும்
தாளலயம் மீண்டும்
நீருக்கடியில்
கூழாங்கல் உருளும் ஓசையைப்
பெற்றுவிடும்.
இப்போது மிக நெருங்கிக் கேட்கும்.
கலகமற்ற சூட்சுமமாய்
என்மீது தடதடக்கும்
ஏனெனில்
நீர்ப்பரப்பு இப்போது
என்மீது ஓடிக்கொண்டிருக்கும்
Thursday, January 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment