இது ஒரு திருப்பம்
திடீரென அவன்
எனக்குத் தெரிந்தவனாகினான்
மணல்தடத்தில் மாட்டுவண்டிகள்
எழுப்பிய ஓசையிலிருந்து
தோன்றினான்
சிந்தனையின்
சமவெளிப் பிரதேசங்களை விட்டு
வெகுதூரம் பிரிந்து வந்திருந்தேன்
நான் ஒன்றும் பிரயாணம் செய்பவனல்ல
எனினும்
என் இடம் ஒன்றல்ல
என்னைச் சூழும் பிரதேசங்கள்
மாறிமாறி வேறுவேறாகும் விநோதம்
விநோதம் பிளந்த ஒரு வினாடியிலிருந்து
அவன் வெளிப்பட்டான்
குறுகலான சந்துகளில்
எனக்குக் கிடைத்த என் சொந்த உருவம்
அவனப் பார்த்தபோது மங்கிப் போனதைப்
பின்னர்த் தட்டுப்பட்ட அனுபவமாக உணர்ந்தேன்
வாழ்வின் அணுக்களிடையே சீறும்
தனிமையின் விஷம்
எனக்குப் பழக்கமாகிவிட்டிருந்தது
இல்லாமையிலிருந்து
தோற்றங்கள்
எனக்கு வரத்தொடங்கியிருந்தன
வார்த்தைகள் வழங்குவதையெல்லாம்
மறுத்துக்கொண்டே கடந்து
கடைசியில்
எந்தச் சுரங்கத்திலும் நுழையாமல்
இருந்த இடத்தில்
திரும்பவே நேர்ந்தது
வார்த்தைகள் இப்போது
கற்படிவங்களாய்க் கிடந்தன
கற்படிவங்களின் வெற்றியை நகைத்து
அவன் தோன்றினான்
Thursday, January 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment