வீட்டு வாசலைத்
தொட்டுத் ததும்பிய மழைவெள்ளம்
முன்பொரு சமயம் கேட்ட
நள்ளிரவு ஒப்பாரிக் குரல்
கரைந்திருந்தது அதில்
மூழ்கினவை என
ஆளற்ற
பேச்சுக் குரல்கள்,
மழையோசையுடன் போட்டியிட்டுக்கொண்டு
நனைந்து
மாற்றுடையின்றி
மாற்றுருவமுமின்றி
இருந்தேன்.
ஓயாது தர்க்கிக்கும் தூறல்
கசங்கிக் கலைந்து கிடக்கும்
நாட்களின் குவியலிலிருந்து
எழும் புழுங்கல் வெப்பம்
இதவு
மாட்டுக் கொட்டகையிலிருந்து
சிற்றிருளை உராய்ந்துகொண்டு வரும்
பெருமூச்சு
ஆசுவாசம்
தலைப்பில்லாத ஒரு தவிப்பு
தவிப்பின் தனி இதம்
நனைந்து
மாற்று இடமில்லாதிருந்த
என் மாலையைப் பற்றிக்கொண்டு
மாற்றுருவம் இல்லாதிருந்த நான்
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment