Saturday, January 12, 2008

மாலை -- என் வடிவு

வானம் தெரியும் நடுமுற்றம்
மரக்கட்டிலில் நெருங்கி அமர்ந்து நாங்கள்

சமயலறைச் சுவருக்குப்போக மிஞ்சிய
கொஞ்சம் சிமினி விளக்கு வெளிச்சம்
எங்களருகில், பராக்குப் பார்த்துக் கொண்டு

அம்மா சொன்ன கதை
வழக்கம் போல
மெல்லிய திரைச் சீலைகளுக்குப் பின்னிருந்து
நிகழ்ந்து காட்டியது

திரவமாகித் ததும்பிய நான்

என்னிடம் இருந்ததால்
என் வடிவில் இருந்த நான்

மாலையோடு பேசித் தளிர்க்கும்
கதை
என் வடிவில் இருந்த கதை

யோசிப்பும் நின்றுபோன
மௌனம்
என் வடிவில் இருந்த மௌனம்.

No comments: