Saturday, January 12, 2008

மாலை -- ஆறுவயதில்

நடுவில் நான்
நீங்கள் சுற்றிலும்

பதற்றம் இல்லைபோலப்
பாவனை செய்தோம்

சந்திப்பின் தாங்கொணாத வதை.

நம்மைப் பிணித்தது ஒரு விதி
மாலைக் காற்றைக் கொண்டு

காற்றின் ஓரமாக
யாருக்கும் காட்டப்படாத
பாதைகள்
விரைந்தோடின;
என் விரல் ரேகைகளில் வந்து முடிந்தன

ஆள் புழக்கமற்ற என்
பாதைகளைக்
கிழித்துக் குதற
வேட்டைவெறி கொண்டிருந்தீர்கள்

பாறைகளை
ஊதி உருட்டித் தள்ளும்
என் மலைகளின் மீது
என் கனல் சுற்றிவந்தது

கனல் மீதேறவும்
கைகால் வீசினீர்கள்

என்ன தெரியும் எனக்கு
அந்த ஆறு வயதில்?

எனது தூரத்தைத் தாண்டிய பார்வையைத்
தொடராது விட்டுவிட,
சூழும் கிறுக்கல்களிலிருந்து விடுபட்டு
மையம் என ஒன்று இன்றி
இருக்க

என்ன தெரியும்?

கனல்மீதேறக்
கைகால் வீசிச்
சுற்றிலும் நீங்கள்
நடுவில் நான்

No comments: