ஆவேசம் திரிந்து
அபத்தமாக உருக்கொண்டது
ஒலிஒளிக் காட்சி முடிந்து
நினைவு எதுவுமின்றித்
திரும்பும் கூட்டம்
இலைபூ பறவைக்கூடு என்ற
பேதம் மரத்து
மழுங்கி நின்றன
சலையோர மரங்கள்
இலக்கு மறந்து
எதிர் எதிர் பாய்ந்து
தன்னைத்தான் முட்டிக்கொண்டு
கல்லாய் நின்றது
காற்று
புலன்களிடையே
இடைவெளி நெடிதானது
இடைவெளியில் புரண்டு
சாம்பல் மணக்கக்
கிடந்தது இரவு
மூளையின் அறைகளுக்குள்
அசடு கனத்தது
வெட்ட வெளியில்
முன்னால் போகவும்
பின்னால் போகவும்
ஒரே நேரம் அடியெடுத்து வைத்தபோது
நான் பார்த்தது:
ஆகாயம் நோக்கிக்
கைகளைத் தலைகளை ஆட்டிப்
பேசத் தொடங்கினர்
ஆணும் பெண்ணுமாய்
அறுபது எழுபதுபேர்
வெவ்வேறு நிலைகளில்
உட்கார்ந்தபடி
வெளிச்சம் இளித்தது
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment