Tuesday, January 1, 2008

அந்தி

மனசின் உச்சியில் குவிந்து
முரடுபட்டது அந்தி

எதுமுன் எதுபின் என்று
தயக்கத்தில் தேங்கியது
இயக்கம்

அடிமண்ணின் வெப்பத்தில்
புழுங்கியது மூச்சு

இனம்புரியாது
இருண்ட அழுத்தம்

உணர்வின் அணுக்கள் சிதறி
உறைந்தன
வாசற் படிகளில்

ஓசைகள் இறுகிப்
பாறைகளாயின

அவை செத்தன எனக்கொண்டு
சுருதி கிளம்பிக்
கமழ்ந்தது

பழகிய பரவசங்கள்
சக்தியற்றுக் கிடந்தன

மந்திரங்கள்
வெளியேறிச்
செய்வதறியாது திகைத்துக்
கூட்டமாய் அமர்ந்தன
மரத்தடியில்

No comments: