மனசின் உச்சியில் குவிந்து
முரடுபட்டது அந்தி
எதுமுன் எதுபின் என்று
தயக்கத்தில் தேங்கியது
இயக்கம்
அடிமண்ணின் வெப்பத்தில்
புழுங்கியது மூச்சு
இனம்புரியாது
இருண்ட அழுத்தம்
உணர்வின் அணுக்கள் சிதறி
உறைந்தன
வாசற் படிகளில்
ஓசைகள் இறுகிப்
பாறைகளாயின
அவை செத்தன எனக்கொண்டு
சுருதி கிளம்பிக்
கமழ்ந்தது
பழகிய பரவசங்கள்
சக்தியற்றுக் கிடந்தன
மந்திரங்கள்
வெளியேறிச்
செய்வதறியாது திகைத்துக்
கூட்டமாய் அமர்ந்தன
மரத்தடியில்
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment