Monday, December 24, 2007

அடையாளம்

எங்கெல்லாமோ
தேடினாய்

நான்கு அடிவானங்களிலிருந்து
பூமியை வலைசுருட்டி
மடியில் கொட்டி ஆராய்ந்து

கொம்பு நுனிமுதல்
வால் நுனி வரை
அலசிப் பாய்ந்து

பல்லில் நகத்தில் பதுங்கியிருந்து

சதைகளைப் பிளந்து பிளந்து

இருளைக் கடித்துச்
சுவைத்துத் துப்பி

எங்கெல்லாமோ
தேடினாய்

என்னுள்
புதர்விலக்கித் துருவிக்
கண்டுபிடித்ததென்ன, உன்
சிதறல்களேயன்றி

கிடைத்தேனா
ஏது .. .. எனக்கு
அடையாளம் ஏது

சூழ்வெளியின் உளறல்கள்
என் கண்ணில்
கீறியதுதான்
என்னிடம் உண்டு
அடையாளம் ஏது

நம் கரைசலில் நீ
மீட்ட என் நிழல்களும் கூட
சிரிப்போடு
ஆவியாகிப் போயின

0

கிடைத்தேனா

நிறுத்துங்கள்

பிடியுங்கள் குழந்தையை

சூழவும்
ரத்தப்புரி சுற்றிய
பிரசவ வேதனையையும் சேர்த்தே
பிடியுங்கள் இவனை

நம் அடையாளம்
நம்மிடம் ஏது

No comments: