எங்கெல்லாமோ
தேடினாய்
நான்கு அடிவானங்களிலிருந்து
பூமியை வலைசுருட்டி
மடியில் கொட்டி ஆராய்ந்து
கொம்பு நுனிமுதல்
வால் நுனி வரை
அலசிப் பாய்ந்து
பல்லில் நகத்தில் பதுங்கியிருந்து
சதைகளைப் பிளந்து பிளந்து
இருளைக் கடித்துச்
சுவைத்துத் துப்பி
எங்கெல்லாமோ
தேடினாய்
என்னுள்
புதர்விலக்கித் துருவிக்
கண்டுபிடித்ததென்ன, உன்
சிதறல்களேயன்றி
கிடைத்தேனா
ஏது .. .. எனக்கு
அடையாளம் ஏது
சூழ்வெளியின் உளறல்கள்
என் கண்ணில்
கீறியதுதான்
என்னிடம் உண்டு
அடையாளம் ஏது
நம் கரைசலில் நீ
மீட்ட என் நிழல்களும் கூட
சிரிப்போடு
ஆவியாகிப் போயின
0
கிடைத்தேனா
நிறுத்துங்கள்
பிடியுங்கள் குழந்தையை
சூழவும்
ரத்தப்புரி சுற்றிய
பிரசவ வேதனையையும் சேர்த்தே
பிடியுங்கள் இவனை
நம் அடையாளம்
நம்மிடம் ஏது
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment