கிலுகிலுப்பை.
பழுப்பேறிய வெளிச்சத்தைப்
போட்டுக் குலுக்கி
முகமெல்லாம் மணக்க மணக்க
கண்ணெல்லாம் இனிக்க இனிக்க
ஆடுவேன் ஆடினேன்
கிலுகிலுப்பை
சப்தம்
வழுவழுத்துப்
பிதுங்கி வழிந்து
சளியோடையாய்
நகர்ந்து நுழைந்தது
விளையாட்டு
திருகி முறுக்கிற்று
விடவில்லை
குழந்தை
நான்
சப்தம் சளியோடை
நகர்ந்து உள்நுழைந்து
பரபரத்தது
உள் எங்கும்
கதிர்கள் நனைந்து
நுனிமழுங்கிச் சுருண்டன
ஆடினேன் கிலுகிலுப்பை
சூழ்ந்து செறிந்திருக்கும்
தன் அணுக்களின்
முகச்சோர்வு சகியாது
அவன் வெளிவந்தான்
'சீ
என்ன செய்கிறாய்
நான் துயில் எழவில்லை
உறக்கம் கலைந்தேன்'
என்றான்
கிலுகிலுப்பையைத் தூர எறிந்தேன்
பரல்கள் தம் பெயர்சொல்லித் தெறித்தன
'ஹிரோஷிமா'
'ஹரேராம ஹரேகிருஷ்ணா'
0
இன்னும்
ஒரு விளையாட்டைத் தேடி
வியர்க்கிறேன்
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment