உள்ளே வா
குளிரா நடுக்கமேன்
நிமிர் குனி
சிரி
நட ஆடு பாடு பேசு
இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
இன்னும் கொஞ்சம் துடிப்பாய்
ஆமாம், இன்னும் கொஞ்சம் மணமாய்
இருந்திருக்கலாம்
பார்வைக் கூர்மை
இன்னும் கொஞ்சம்
இருந்திருக்கலாம்
இன்னும் ...
இன்னும் ...
சரி, பரம்பரைச் சொத்தென்ன
உன் சொத்து எவ்வளவு
சமயத்தில்
சஞ்சீவிமலை சுமப்பாயா
ஊஹூம் போதாது
போதாது போபோ
பாவம் வார்த்தைகள்
மலடு வழியும் முகத்தோடு
வெளியேறும்
வெளியேற்றத் திறந்த
கதவிடுக்கு வழியே
முட்டிமோதிப் பீறிடும்
கன்னி மனம்.
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment