நீரூற்றிச் சலித்தது
கை
தன்னைக் கீறி
வெளிவளர்ந்த
விதையை
வியந்து நோக்கிற்று
மண்
விதைபருத்து
பிரம்மாண்டமாய்த்
தன்னை விழுங்குவது கண்டு
விதிர்த்தது வெளி
மரமாய்க் கிளையாய் விழுதாய்
அன்றி
'வெறும் விதையாகவே'
வளர்கிறது
இன்னும் இன்னும்
ஒட்டி நின்றேன்
உள்ளே அடர்த்தியாய்ப் பேச்சுக்குரல்
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment