Monday, December 24, 2007

வெளிப்பாடு

நீரூற்றிச் சலித்தது
கை

தன்னைக் கீறி
வெளிவளர்ந்த
விதையை
வியந்து நோக்கிற்று
மண்

விதைபருத்து
பிரம்மாண்டமாய்த்
தன்னை விழுங்குவது கண்டு
விதிர்த்தது வெளி

மரமாய்க் கிளையாய் விழுதாய்
அன்றி
'வெறும் விதையாகவே'
வளர்கிறது
இன்னும் இன்னும்

ஒட்டி நின்றேன்
உள்ளே அடர்த்தியாய்ப் பேச்சுக்குரல்

No comments: