குருடாய் முடிவுற்றது சந்து
அசடு வழிந்து திரும்பினேன்
பம்பரம் சுழற்றும் பையன்கள்
சிரித்தார்கள் லேசாக
அருகில் ஏதோ வீட்டில்
தந்தியைப் பிரிந்து
கூர்ந்து கூர்ந்து போய்
ஊசிமுனைப் புள்ளியுள் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது
கமகம்
உடல் உளைந்து
பெருமூச்சு விட்டபின்
தோன்றியது:
'ரத்தம் எப்போதும்
குருட்டுச் சந்தில் சுமையிறக்கித்
திரும்ப வேண்டியதே'
கோலங்களை மிதிக்காதிருக்கக் குனிந்து
தோரணப் பச்சை
கடைக்கண்ணில்
சந்தேகமாய்ப்பட நடந்து
சாலையை அடைந்தேன்
எதிரே
அடர்த்தியாய் மினுமினுப்பாய்
ஒரு கல்யாண ஊர்வலம்,
வானம் கவனிக்க
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment