Saturday, November 24, 2007

உளவாளிகள்

என் பிம்பங்களை
முறித்துக் குவித்துத்
தீமூட்டினாய்

மார்கழி கழிந்தது

பார்த்துக்கொண்டேயிரு

நானும் ஒருநாள்
என்னைத் திரட்டி
நின்று கொள்வேன்

ஈரவிரலை உரசி
ஈமத்தீ எழுப்புவேன்

சுற்றிலும்
முள்வேலி சலசலத்து நகர்ந்துவர
நானும்
முகம் இருட்டி
நடமாடுவேன்

என்
ஒரு பகுதிக்குக்
குரல்மாற்றம் தந்து
உன்னுடையதெனக்
கூவித்திரிவேன்

இன்னொருநாள்
என்னிடமிருந்தும்
தப்பி
உச்சியிலிருந்துகொண்டு
பார்ப்பேன்

இயக்கம் விலகி
நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக்
கிடக்கும் என் உருவங்களை
மிதித்தும்
தழுவியும்
கடித்தும்
முத்தமிட்டும்
நீ தேடித்திரிவதை
வேவு பார்ப்பேன்

No comments: