என் பிம்பங்களை
முறித்துக் குவித்துத்
தீமூட்டினாய்
மார்கழி கழிந்தது
பார்த்துக்கொண்டேயிரு
நானும் ஒருநாள்
என்னைத் திரட்டி
நின்று கொள்வேன்
ஈரவிரலை உரசி
ஈமத்தீ எழுப்புவேன்
சுற்றிலும்
முள்வேலி சலசலத்து நகர்ந்துவர
நானும்
முகம் இருட்டி
நடமாடுவேன்
என்
ஒரு பகுதிக்குக்
குரல்மாற்றம் தந்து
உன்னுடையதெனக்
கூவித்திரிவேன்
இன்னொருநாள்
என்னிடமிருந்தும்
தப்பி
உச்சியிலிருந்துகொண்டு
பார்ப்பேன்
இயக்கம் விலகி
நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக்
கிடக்கும் என் உருவங்களை
மிதித்தும்
தழுவியும்
கடித்தும்
முத்தமிட்டும்
நீ தேடித்திரிவதை
வேவு பார்ப்பேன்
Saturday, November 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment