Saturday, November 24, 2007

வினை

விதைத்த வினை
விளைந்தது

விளைந்தவை உதிர்ந்து
மீண்டும் பெருகின
மீண்டும் பெருகின
மீண்டும். . .

வினை அறுப்போர்
எவருமில்லை
எங்கும் எங்கும் வினைமயம்

உலகெங்கும் நிறைத்தன
யுகங்களில் நிரம்பி வழிந்தன
அண்டம், தன்
தையல் பிரிந்து
அவதியுற்றது

இந்தப் பிரளயத்தில்
மிதந்தவர்களைப் பற்றி ஒரு
நிச்சயம் பிறந்தது

மூழ்கிக்
காணாமல் போனவர்கள்
கண்டுபிடிப்பார்கள்
என்றும்
வதந்தி பிறந்தது... ..

No comments: