நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது
கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்
அலறியடித்து
அகாத வெளிகளில்
பறந்தோடின
தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே
0
விடிவு
நினைவுகளையும்
நிறமழித்தது
'நெடுங்காலம்' கடுகாகிக்
காணாமல் போயிற்று
சுருதியின்
பரந்து விரிந்து விரவி...
இல்லாதிருக்கும் இருப்பு
புலப்பட்டது
மங்கலாக
சுருதி தோய்ந்து
வானும் நிறமற்று
ஆழ்ந்தது மெத்தென
பூமியில்
ஒலிகளின் உட்பரிவு
பால்பிடித்திருந்தது
வெண்பச்சையாய்
Saturday, November 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment