Saturday, November 24, 2007

வியர்த்தம்

வெளியேற வழிதேடி
அலைவதிலும்
விளையுமொரு
வட்டம்

நம் முயற்சிகளின்
உள் ஆவி
கெஞ்சிக் கூடவே வந்து
வியர்த்த விளிம்புவரை
புலம்பிப் பார்த்து
முணுமுணுத்துப்
பிந்தங்கிப்
புள்ளியாய் மறையும்.

No comments: