Wednesday, February 6, 2008

கவிதை படிக்கும் போது

குரல்
தெளிவாக
திருத்தங்கள் தேவையற்று
இருக்குமாம்

சிமிட்டலின் மின்னொளி பட்டு
உலகம் பிளந்து
உள்ளே தெரியுமாம்

எதையோ தொட்டுவிட்டதான
திருப்தியில்
விரல்களைப் புதிதாக
நேசிக்கத் தோன்றுமாம்

இதயத்தைச் சுற்றி
இளஞ்சூட்டில்
காற்று நிரம்பும்;
த்வனிகளைக்
கண்டடைந்து விட்டதால்
பதற்றம் தணியும் ...

சொல்கிறார்கள்

மேலும்
அருகில் எங்கோ இருந்துகொண்டு
தர்க்கம் கவனித்தவாறு இருக்குமாம்,

கவிதை படிக்கும் போது.

சொல்கிறார்கள்

No comments: