வாய் பிளந்து
காலத்தின் இடைத்திட்டில்
காத்திருந்தது
ஒரு புள்ளி
சுற்றிலும்
சீறி மின்னிச் சென்ற
அணுத்துகளில்
ஒன்று
சட்டென நின்றது
புள்ளியுள் நுழைந்தது
கறுத்துமேலும்
சிறுத்துச் சுழன்றது
கனத்த புள்ளி
சப்த வியாபகத்தில்
ஆணியால் கிறுக்கிய
வெளுத்த சித்திரங்கள்
சுற்றிலும் மிதந்தோட,
இடைத்தட்டில்
காத்திருக்கிறது
கனத்த புள்ளி
காத்திருக்கிறது
தூரிகையின் ஒரு
நார் நுனி தேடி
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment