காடு முழுதும்
சுற்றினேன்
பழைய
சுள்ளிகள் கிடைத்தன
நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின
குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது
அணைத்து,
கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்
தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment