Saturday, December 1, 2007

வெளியே

ஆயினும் இன்றுகாலை
விடிவெளிச்சத்தில்
உள்ளே பார்த்தேன்

அணைத்துத்திணறிப்பின்
ஒன்றையொன்று
கருக்கிக்கொண்ட
இரு மூச்சுகள்;

ஒன்றையொன்று
குத்திக் கோத்த
இரு பார்வைகள்;

கண்ணாடித்தூள் பாதையில்
முனகிக் கிடக்கும்
நான்கு காலடிச் சுவடுகள்;

வெளியேற வழியின்றித்
தவித்திருந்தன

No comments: