நெருப்பு ஒருநாள்
செத்துப் போனது
சூரியனை உதைத்து
விலகிப் போயின
அண்டஞ் சுற்றிகள்
உறைந்தப்பிய இருளில்
குளிர்ந்து
மடிந்து
ஒய்வுகொள்ள வெறிகொண்டன
இடம்வழி பொழுது
தேடி அலைந்தன
அலைச்சலில் உழன்று
புது அலுப்புற்றன
'ஒய்வினும் பெரிய
உளைச்சல் எது'
'உளைச்சல் இல்லாதது
என்ன உண்டு'
கூடின பேசின
பேசின பிரிந்தன கூடின
ஒய்வுக்காக
ஒய்வற்று முயன்றன
முயலும்போதே
உள்ளே
திருட்டு ஆசை
முளைவிட்டது
'சூரியன் மறுபடி
விழிக்காதா'
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment