Monday, December 24, 2007

ஓய்வு

நெருப்பு ஒருநாள்
செத்துப் போனது

சூரியனை உதைத்து
விலகிப் போயின
அண்டஞ் சுற்றிகள்

உறைந்தப்பிய இருளில்
குளிர்ந்து
மடிந்து
ஒய்வுகொள்ள வெறிகொண்டன

இடம்வழி பொழுது
தேடி அலைந்தன

அலைச்சலில் உழன்று
புது அலுப்புற்றன

'ஒய்வினும் பெரிய
உளைச்சல் எது'
'உளைச்சல் இல்லாதது
என்ன உண்டு'

கூடின பேசின
பேசின பிரிந்தன கூடின

ஒய்வுக்காக
ஒய்வற்று முயன்றன

முயலும்போதே
உள்ளே

திருட்டு ஆசை
முளைவிட்டது

'சூரியன் மறுபடி
விழிக்காதா'

No comments: