Monday, December 24, 2007

நினைவின்மை 2

புதருக்கு
நெருப்புவைத்து
ஒதுங்கிக் கொண்டேன்

நெருப்பைத்தன்
வேரில் கட்டிப் போட்டுச்
சிரித்தது புதர்

வெட்டிச் சாய்ப்போமென
முயன்றபோது
அரிவாள் கூரில்
முசுமுசுவென வளர்ந்தது

நடுவே அமர்ந்து
கண்மூடி நான்
வெட்ட வெளியைச்
சுற்றிலும் விரித்துக்கொள்ள, என்
புற இமை தடவி
அனுதாபமாய்க் கவனித்தது
புதர்

பேசாமலிருந்து விட்டேன்
பெருந்தன்மையாய்

No comments: